உடுமலை :
அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் துவங்கியதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், நீர் மட்டம் உயர்ந்தது. சாகுபடி பணிகளை மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, அணையிலிருந்து கீழ் மதகுகளை திறந்தார். மதகுகள் வழியாக ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் கரைபுரண்டோடியது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது.
யிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் துவங்கியதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், நீர் மட்டம் உயர்ந்தது. சாகுபடி பணிகளை மேற்கொள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு, அணையிலிருந்து கீழ் மதகுகளை திறந்தார். மதகுகள் வழியாக ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் கரைபுரண்டோடியது. நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது.
நன்றி - தினமலர்